இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கோயிலிலே மணியோசைக்
கோமாளம் ஆடிவிட்டு
வாயிலெலாம் வன்கருமை
மனமெல்லாம் பேயிருட்டாய்
வாழ்வினிலே மடமைவழி
செல்லுகின்ற மாண்புடையீர்
கீழ்மையிலே நிலைநின்றும்
கேலியறக் கூத்தெதற்கோ ?
மணியோசை வேண்டாவாம்
மனக்கோயில் அன்பெனுமோர்
இணையேது மில்லாநல்
லெழில்நந்தா விளக்கிட்டால்
பொன்னாட்டு மணியோசை
பொங்கியெழுந் தெண்டிசையும்
என்னாட்டும் கணகணத்தே
இன்னமுதம் பொழிந்திடுமே.
கோமாளம்-கோமாளியின் பரிகாசச் செயல், வாயில் என்பது இங்கு ஐம்பொறிகள். வன் கருமை-வலிய கருஞ் செயல்களாகிய கொடுமைகள். கணகணத்து- கணகண
வென்று ஒலி செய்து.
96