சடை: - கடவுள் கருணையே உருவானவர்னு சொல்வாங்களே. ஓங்காளி அவ்வளவு கொடுமைக்காரியா அப்பா, ஊரையே கெடுக்க?
இருளன்:- ஏது? ஒங்கிட்டேயும் வாத்தியாரு வாசம் அடிக்கிறாப்ல இருக்குதே! இதெல்லாம் உனக்கென்ன தெரியும்? போய் ஒன் வேலையைப்பார்.
(சடைச்சி போக, வயிரமுத்து வருகிறான்.)
வயிர:- ரொம்ப கோவம் போலேருக்குது பூசாரிக்கு! யாருமேலே?
இருளன்:- அதை ஏங் கேக்கறே போ. அந்த வாத்தியாரு வந்தாலும் வந்தான், ஊரையே கெடுத்திட்டான். நம்ம வரும்படியிலும் மண்ணு உழுந்தது. வர்ற கோவத்துக்கு, அவனை என்ன பண்ணனுந் தெரியுமா?
வயிர:-எனக்கும் அப்படித்தான் இருக்குது. யாரைத்தான் மிச்சத்திலே உட்டான்? பூசாரி ஒரு வேலை செய்வோமா?
இருளன்:- என்ன?
வயிர:- (மெதுவாக) நீ பக்கபலமா இருக்கறதான, அவனை ஒழிச்சே கட்டிடறேன். என்ன சொல்றே?
இருளன்:- வழி?
வயிர:- எல்லாம் இருக்குது. நான் செய்யறேன்.
இருளன்:- செய்யப்பா ஊரைப் புடிச்ச சனியனாவது ஒழியட்டும்.
(அடுத்த அறையில் பாத்திரம் விழுகிற சப்தம்)
28