பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:14 மாமல்லன் சிம்சோன் குழு ஆள் எல்லாம் நன்மைக்கே. கடவுளின் திட்டத்தை நாம் அவ்வப்போது ஐயப்படுவதும், முடிவில் அவை நல மாகவே முடிகின்றன. சில நேரங்களில் கடவுள் நம்மை வெறுப்பதுபோல் தோன்றும். ஆனல் அவர் மீண்டும் எதிர் பாராத வகையில் நமக்கு நன்மை செய்வார். சிம்சோனின் வாழ்வில் அதை அவர் நமக்குச் செய்து காட்டியுள்ளார். சிம்சோனின் எதிரிகளெல்லாம் இப்போது கவலையில் ஆழ்ந்துள்ளனர். சிம்சோனைத் தடுக்கும் ஆற்றல் எவருக்கும் இல்லாது ப்ோயிற்று. இப்போது நடந்த இந்த நிகழ்ச்சிமூலம் கடவுளின் ஊழியக்காரர்கள் பு தி ய பட்டறிவையும், மெய்ம்மையையும் பெற்றுள்ளனர். அவர்கள் இப்போது அமைதியோடும் மனநிறைவோடும் வீட்டுக்குச் செல்லலாம்.