பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் வரலாறு இறைபணிக்கே தம்மை ஆட்படுத்திய ஆங்கிலக் கவிஞர் இளமையும் கல்வியும் ஆங்கில இலக்கிய உலகில் சேக்சுபியருக்கடுத்தவரும் சேக்சுபியருக்குக் கிட்டத்தட்ட ஒப்பானவரும் ஆன கவிஞர்பிரான் மில்ட்டனேயாவர். சேக்சுபியர் எழுதியவை முப்பது நாடகங்களும் ஒன்றிரண்டு சிறு காப்பியங்களுமே. அவற்றுள் இறவாச் சிறப்புப் பெற்றவை நாடகங்களுள் பத்து அல்லது பன்னி ரெண்டு தலைசிறந்த நாடகங்களேயாகும். இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணுாறும் எழுதும் இறையருள் பெற்ற இக் கவிஞர் பிரான் தாம் எழுதியதை இரண்டாம் முறை பாராத அளவு விரைவில் எழுதியமையால் எழுதிய நூல்களின் பெருமையத்தனையும் அவர் இயற்கையறி வின் பெருமையேயாகும். ஆனல் மில்ட்டன் சிறு காப்பியங்களும் எழுதியுள்ளார்; .ெ ப. ரு ங் கா ப் பி யங் க ளு ம் எ ழு தி யு ள் ளார்; இரங்கற்பாக்களும், நாடகங்களும் எழுதியுள்ளார். போக உரைநூல்களும் எண்ணில. அந் நாளைய பிற நாட்டுப் புலவர்களுடன் அந் நாளைய புலவர் பொது மொழியாகிய இலத்தீனத்தில் நூல் வெளியீட்டு மூலம் சொற்போர் புரிந் தும் உள்ளார். இவர் சேக்சுபியர் போன்றே அருட்கவி என்பதில் ஐயமில்லையாயினும், அருளுடன் அறிவையும் முயற்சியையும் ஒருங்கே பயன்படுத்தி அருளுக்கோர் அருந் திறன் தந்தவர் ஆவர். இவர் முதல் முதல் எழுதிய கவிதை களில்கூட உயர்ந்த செம்மைப்பாடு உள்ளதென்பதில் ஆA மில்லை. ஆலை பிற்காலக் கவிதையில் இதளுேடுக.ட 1