பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மர்ம்ல்லன் சிம்சோன் 19 அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப் பண்ணி, ஒருவன அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு சடை களையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங் கிள்ை; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று. 20 அப்பொழுது அவள்: சிம்சோனே பெலிஸ்தர் உன் மேல் வந்துவிட்டார்கள் என்ருள்; அவன் நித்திரைவிட்டு விழித்து கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்ருன். 21 பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள். 22 அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று. 23 பெலிஸ்தரின் பிரபுக்கள்: நம்முடைய பகைஞனகிய சிம்சோணை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக் கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தார்கள். 24 ஜனங்கள் அவனேக் கண்டவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனே நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள். 25 இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கை காட்டுமபடிக்கு, சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்ருர்கள்: அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார் கள். அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினன்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினர்கள்.