பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மாமல்லன் சிம்சோன் ஏமாற்றவில்லையா? கண்ணிரால் என் நெஞ்சத்தைக் கனியச் செய்து என் வல்லமையின் கமுக்கத்தை அவள் என்னிட மிருந்து கரந்துவிட்டாள். அவளிடத்தில் என் கமுக்கத்தைச் சொன்னவுடன், அதை அவள் என் ஒவ்வொரு செயலையும் உற்றுநோக்கி வ ந் த பகைவர்களிடம் வெளிப்படுத்தி விட்டாள். முந்தைய என் பெலித்திய மனைவியைவிட என் இரண்டா வது மனைவி தீவியாள் மிகவும் நம்பிக்கையுள்ளவளாக இருப் பாள் என்று நான் எதிாபார்த்தேன். ஆனால், என்னே அவள் காட்டிக்கொடுத்தால் பெரும் பணம் பரிசாகத் தருகிருேம் என்று பெலித்தியர்களால் வாக்குறுதி கொடுக்கப்பட்டு அவளும் பெவித்தியர்களால் கெடுக்கப்பட்டாள். நாங்கள் திருமண உறவில் ஈடுபட்டிருந்தபோதே அவள் பொற் பரிசால் கெடுக்கப்பட்டு, இரண்டகந்தழைக்க உருவுறறிருந் தாள். இரண்டகமே அவள் ஈன்ற முதற் குழந்தையாயிற்று. தங்கத்தின் நி னை ப் பே அவளை நம்பிக்கைக்கேட்டைக் கருவுறச் செய்தது. தன் கெஞ்சல்களினலும் கொஞ்சுதலி லுைம் அளவிலா இன்பத்தை அள்ளித்தந்து வெற்றிபெற மூன்று முறை முயன்ருள். மும்முறையும் நான் அவளே ஏமாற்றினேன். அவள் வேண்டுதலைப் புறக்கணித்தேன். ஒவ்வொரு முறையும் அவள் என்னை வீழ்த்த எவ்வளவு வ்ெளிப்படையாய் முயல்கிருள் என்பதை நான் கண்காணித் தேன். எனது கமுக்கத்தை நானே காட்டிக்கொடுக்கும்படி செய்ய அவள் முயன்ருள். மும்முறை தோற்ற அவள், நான்காவது முறையாக, தன் வஞ்சக வழிகளையெலலாம் பயன்படுத்தி மயக்கும் மொழிகளாலும், ஆர்வமூட்டும் மேனி மினுக்காலும், கண்ணிராலும் என்னை வஞ்சிக்க முயன்ருள். இரவு பகலாய்த் தொடர்ந்து அவள் ஈடுபட் டாள். ஒய்வின்றி முயன்ருள். அவளது தொந்தரவு தாங்க முடியாமல் நின்ற வேளையில, நான் என் குடுமியில் மறைதது வைக்கப்பட்ட அந்தக் கமுக்கத்தை வெளியிட்டுவிட்டேன். இன்னும் சற்று மன உறுதியும் திடமான எண்ணமும் கொண் டிருந்தால், அவளின் வஞ்சக வலையில் சிக்காமல் நான் தப்பி