பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மாமல்லன் சிம்சோன் வெட்கக்கேடான ஏதுக்களைச் சொல்லி வீணில் உன் தவற்றை மறைகக முயல்கிருய். உன் வஞ்சகச் செயலே முறைப்படுத்த முயல்வதின்மூலம் உன் தவற்றை நீ தெளிவுபடுத்துகிருய். தீலியாள்: ஆணுே பெண்ணுே, எவராயினும் குறைபாடு அவர்கள் செய்த த வ ற் று க் கு மன்னிப்பளிக்கத்தக்க காரணம அல்ல என்று நீங்கள் நினைப்பதால், நான் அவர்கள் திட்டத்திற்கு இணங்குமுன் எப்படியெல்லாம் அதைச் செய்யுமாறு தூண்டபபட்டேன் என்றும், என்னென்ன வழிகளில் அவர்கள் முயன்ருர்கள் என்பதையும், எனக்கு ஆசையூட்டி அடிபணியச்செய்ய அவர்கள் கையாண்ட வழிகளையும் உனக்குச் சொல்ல வாய்ப்பளி! என்னைக் கலக்கப் படுத்த அவர்கள் ஆற்றல்வாய்ந்த வழிகளைப் பின்பற்றினர் கள. செம்பொன்னுக்காக உங்களை நான் காட்டிக்கொடுக்க வில்லை. என் நாட்டின் அறவாணாகளும் இளவரசர்களும் என்னை அணுகினர். முதலில் இந்தப் பணியைச் செய்யும்படி வேண்டினர். பின் ஆனேயிட்டனர், அச்சுறுத்தினர், சீற்ற மூட்டினர். பின் என் நாட்டிற்கும், என் மதத்திற்கும் நான் செய்யவேண்டிய கடமைகளைச் சுட்டிககாட்டி வேண்டினர். எண்ணற்ற பெலிததியர்களைக் கொன்று குவித்த சிம்சோனை வீழ்த்துவதைவிடப் பெருமைக்கும். நற்புகழ்க்கும் சிறப்புக் கும் உரிய வேறு பணி இருக்கமுடியாது என்றுரைத்தனர். தங்கள் கடவுள் வருணனை இழிவுபடுததிய சிம்சோனைச் சிக்க வைக்க நான் அவர்களுக்கு உதவிஞல அது கடவுளுக்கு உகந்த தாகக் கடவுள் பார்வைக்குச் சிறந்த செயலாக இருக்கும் எனச் சொல்லி என்னைத் தூண்டினர். இந்த ஆற்றல் வாய்ந்த சொற்களே எதிர்ததுரைக்க, எதிர் நிற்க என்னிடம் ஆற்றலில்லை. உங்கள் பொருட்டு உங்கள்பால் நான் கொண்ட காதலால என்னுள் ஒரு பெரும் போராட்டமே ஏற்பட்டது. இறுதியில் எங்கும் எபபோதும் பேசப்பட்டு, நன்கு நிலை கொள்கையாகிய பொதுநலனுக்காகத் தன்ன سلسلالالاما-gTL லத்தைத் துறக்கும் முடிவுக்கு வந்தேன். என் கடமை, உணமை, நற்குணம் அனைத்தும் உ ங் க ளே க் காட்டிக் கொடுக்கச் செய்தன.