332
மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
தடுக்கும் குற்றத்தையும் செய்ய விரும்பவில்லை. நீங்கள் வேண்டுமானால் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேண்டிய முயற்சிகளில் இறங்கி, புதிய விதை, புதிய உரம் போன்றவற்றைக் கண்டு பிடியுங்கள். அதற்கு வேண்டிய ஊக்கமும் ஆக்கமும் அளிக்க நான் எப்பொழுதும் தயார்’ என்று சொல்லி, மிஸ்டர் விக்கிரமாதித்தர் அவர்களை அனுப்பி வைப்பாராயினர்.
இத்துடன் மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் முற்றியது
காண்க... காண்க... காண்க..... . வாழி வாழி,
மிஸ்டர் விக்கிரமாதித்தன்
ஏடு இஸட் வாழி!
வாழி வாழி,
மிஸ்டர் விக்கிரமாதித்தனைப்
படித்தார் வாழி!
வாழி, வாழி,
மிஸ்டர் விக்கிரமாதித்தனைப்
படிக்கக் கேட்டார் வாழி!
வாழி, வாழி,
மிஸ்டர் விக்கிரமாதித்தனைப்
படிக்காதாரும் வாழி!