பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

வேதாந்தப் பயிர் வளரும் பண்ணையே சிருங்கேரி. மனிதனின் உயரிய சிந்தையின் எடுத்துக்காட்டு. கால வெள்ளத்தில் கரைந்து போகாத ஒன்று. நுனிப்புல் மேய் வோருக்கு அங்கே இடமில்லை. அற்பருக்கும் இடமில்லை.

பல நூற்றாண்டுகளாக அங்கிருந்து வழி காட்டும் ஆத்ம சக்தி எத்தகையது என்று அறிவதற்கு அவ்விடத்தையும், அம்மக்களையும் பற்றித் தெரிந்து கொள்வது உறுதுணை புரியும்.

இந்திய நாட்டிலே ஆத்மிக சிந்தனை அழியவில்லை. அதனால்தான் ஒரு பரஹம்சரும் ஒரு ரமணரும், ஒர் அரவிந்தரும் இந்த நாட்டிலே தோன்றுகின்றனர்.

சிருங்கேரி சாரதா பீடம் இந்தியர் வாழ்க்கையிலே, பண்பிலே, கலாசாரத்திலே விளங்குகிறது. இந்தியர் சிந்தையிலே, இந்திய தத்துவத்திலே முதன்மை பெற்று விளங்குகிறது. ஒவ்வொரு வகையிலும் நிலைபெற்று விட்டது.


4. ஆலயங்களைச் சுற்றி

ரசாங்க விளம்பர இலாகாவோ, வழிகாட்டிகளோ புகாத இடம் ஒன்று உண்டு என்றால் அது சிருங்கேரி தான். இவர்களுடை தொந்தரவு இல்லாமல் எல்லா இடங்களையும் சிருங்கேரியில் காணமுடியும். விளம்பர யுக்தி எதுவும் சிருங்கேரியில் கையாளப்படவில்லை. எழுத்துக் கூலிகளை ஏற்படுத்தி புகழ்பாடச் சொல்வதுமில்லை.