பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கத்தில் ஆழ்த்தியவன் அற்புதத்தில் ஆழ்த்தியவன் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் தொல்லுலக மக்களைத் துக்கத்தில் ஆழ்த்திவிட்டுத் துயமகன் காந்திமகான் பக்கத்தில் ஆழ்ந்துவிடும் பந்தயத்தில் முந்திவிட்டான்! தன்னடியில் வாழ்ந்தோர் தவிக்க உயர்நண்பன் கென்னடியைத் தேடிக் கிளம்பிவிட்டான் எட்டா வேதப் பொருளாலோ வீணை நரம்புதரும் நாதத் திறத்தாலோ நாம்கொணர வொண்ணா இடத்துக்குப் போய்விட்டான்; இன்று தனது படத்துக்கு மாலையிட்டுப் பார்க்கவைத்துப் போய்விட்டான். 다. தாயகத்தைக் காத்துசன நாயகத்தைக் காத்துவந்த நாயகத்தைக் காப்பதற்கு நம்மால் முடியவில்லை. தானம் அளித்துசமாதான மெனுமினிய கானம் இசைத்த கவிதைக் குயிலுக்கு அதிகமாய் வாழ்நாள் அளிக்க முடியவில்லை. புதிய சமுதாயப் பூமலரச் செய்தகொடி வாடாது காக்க வகையில்லை வழியில்லை தேடாமல் தானாகத் தேடிவந்து நாடோறும் வீட்டில் தெருவில் விரிந்து பரந்தயிந்த நாட்டில் அருள்வெளிச்சம் நன்றாய் இறைத்துவந்த ரோகவிதைகள் 0 104