பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D-○・○○os○-○ss○-○so○・○oe○・○oe○-○oo○-○osく -Qజర@రి శిర><ర్తి అర్హ-స్తరిస్త-@@@ <<ర్తి• స్త్ర-@ ఇక JSJAAJeSBBeSJBBJSJBBJSJBBSBBSJAMSBBS D-○oe○○oo○・○oo<>-○ec○-○ea○・○eo<>○oo○-○eaく D・○oo○-○oo○・○oo○-○so○-○ロe○・○oo○-○e*○-○os< LSJAAJJABJSBBSJBBSJBBSJSJABSBBSBBS JSJBBJeBBJSJeBBJSJBBJSJBBJSJA SAAJSBBS நான் மனிதன்! வான்திரியும் தண்ணிலவைப் பார்த்த துண்டா? வசந்தத்தைக் கண்டதுண்டா? துள்ளி ஒடும் மான்கூட்டம் மயில்ஆட்டம் மலரின் தோட்டம் மங்கைமுகம் இவையனைத்தும் கண்ட துண்டா? தேன்கவிதைத் தமிழ்மொழியின் எழுத்தைக் கண்ணால் தின்றதுண்டா? சுவைத்ததுண்டா? இல்லை! அந்தோ! நான்குருடன் நான் குருடன் உலகை நோக்கும் நல்லநிலை எனத்கில்லை; என்ன வாழ்க்கை? கான்ஒடும் ஆறுகளின் சத்தம் என்றன் காதுகளைத் தொட்டதுண்டா? குயிலின் பாட்டைத் தான்கொஞ்சம் கேட்டதுண்டா? குழலும் யாழும் தரும்மதுரத் தனிச்சுவையில் பித்துக் கொண்டே நான்மயங்கிக் கிடந்ததுண்டா? அறிஞர் பேச்சில் நனைந்ததுண்டா என்நெஞ்சம்? இல்லை! அந்தோ நான்செவிடன் நான்செவிடன் குரலைக் கேட்கும் நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை? 107 0 மீரா கவிதைகள்