பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானுடத்தை அழிப்பதென்றன் வேலை என்று மனப்பால்நீ குடிக்காதே வேண்டு மானால் ஊனுடலை அழித்திடலாம்: உடல்இ யக்கும் உயிர்மூச்சை நிறுத்திடலாம்; ஆனால் என்றும் வானுலகு வரைபரவும் பெருமை நீரை வற்றவைக்க முடியாது கருணை மன்னர் தேன்புகழைக், கீர்த்தியினைச் சாவே, உன்னால் தீண்டிவிட முடியாது தெரிந்து கொள் நீ! பலமுறை தனி நூலாகப் படங்களுடன் அச்சிடப் பெற்றது. புகழ்மண்டபம் தொகுப்பிலும் உள்ளது. மீராகவிதைகள் 0 120