பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதற்காம் இரண்டு வர்க்கம்? உழைக்கும் கரங்கள் ஒன்றாய் உயர்ந்தால் ஒளியின் பாதை தெரியும் ஏய்த்துப் பிழைக்கும் எத்தர் பெருக்கும் வஞ்சப் பேதக் கோட்டை சரியும். இறைவன் படைத்தான் என்றால் ஒழிக எதற்காம் நரகம் சொர்க்கம்? - சீச்சி இறைவன் படைத்தான் என்றால் வெட்கம் எதற்காம் இரண்டு வர்க்கம்? கடலின் அலைகள் கைகோர்த் திசைக்கும் கவிதை கேட்டும் மனிதா, - உன்றன் உடலில் ஒட்டிய உயிரைப் போன்ற ஒற்றுமை மறத்தல் இனிதா? கண்ணில் கருத்தில் கனல்கொண் டால், பின் கயமைக் காடு சாம்பல் - இந்த மண்ணில் மலரும் அன்பு முல்லை; மலரும் இன்ப ஆம்பல்! 1964 மீரா கவிதைகள் 0 14