பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தணலால் அவனுளம் தாக்கப் பட்டது. அகல்யா காதலால் ஆயிரம் சொன்னாள்: சொன்னவை தெலுங்கர்க்குச் சுவைதரத் தக்கவை' என்று நினைத்து அகல்யாவை விலக்கி, தமிழ்ப் பெண் கன்னலிடம் தாவி ஓடினான் மருது. அகல்யா விடாது தொடர்ந்தாள். இருந்தும் என்ன? அவள் தெலுங்கச்சி தானே? -- கன்னலும் மருதுவும் கலந்தார்கள். அகல்யாவின் கதி? பாழுங் கிணற்றில் அகல்யா வீழ்ந்தாள். என்ன சொல்லுகிறீர்கள்? அன்பால் கட்டுண்ட இதயத்தை மொழி: 'இனம் என்ற ஆயுதங்களால் வெட்டுண்டு சிதறவைப்பது சரியா? இல்லை, முறையா? இதற்குப் பெயர்தான் தமிழ்ப்பற்றா? 'வெங்குருதிதனிற் கமழ்ந்து வீரஞ்செய்கின்றதமிழ் எங்கள் மூச்சாம்' என்று பாடிய பாரதிதாசன் தமிழ்ப் பற்றுக்குத் தலை வணங்குகிறோம். ஆனால் 'அன்பு - காதல் ஏற்படுவதுகூட மொழி' 'இனம் பார்த்துத்தான் ஏற்பட வேண்டும் என்ற மூடநம்பிக்கைக்குமா தலைவணங்க வேண்டும்? முடியாது. ஒருக்காலும் முடியாது. இதைக்கூறுவதன் நோக்கம் கவி பாரதிதாசனைக் கண்டிக்க வேண்டும் என்பதற்காக அல்ல! கவிஞர் இராசேந்திரன் கவித்துளிகளில் இக் குறைபாடு இல்லை என்பதைக் காட்டுவதற்காகத்தான். - ஒரு துளி காட்டலாம். அவன் ஏரிக்குப் பக்கத்தில் அவளைக் கண்டான்; வெகு நாளாய்க் கண்டான். கொஞ்சம் மயக்கமும் கொண்டான். 15