பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாளைச் சுழற்றி வாடா! வாளைச் சுழற்றி வாடா! - மலைத் தோளை உயர்த்திச் சீறிக் - கூர் வாளைச் சுழற்றி வாடா! (வாளைச்....) தாளை நக்கி வாலை ஆட்டத் தமிழர் என்ன நாயா? - சீனித் துளைப் போன்ற சுகத்துக் காகச் சுற்றித் திரியும் ஈயா? (வாளைச்....) மாற்றான் மொழிக்கு மண்டி யிடநாம் மானங் கெட்டவர் அல்லர் - சீச்சி போற்றா ஒழுக்கம் புரியோம்; நாம்யார்? புகழை வடிக்கும் கொல்லர்! (வாளைச்.....) 177 0 மீரா கவிதைகள்