பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழியட்டும் இருட்படலம்; வீறு கொண்டு கிளம்பட்டும் இளம்பரிதி; முள்ளின் பாதை அழியட்டும்; மலர்ப்பாதை பாதந் தன்னை அணைக்கட்டும்; துயர்துற்றும் வாடைக் காற்று ஒழியட்டும்; ஒடட்டும் பன்னீர்த் தென்றல் உலவட்டும்; தவழட்டும்; செந்தேன் மாரி பொழியட்டும்; தமிழகத்தின் சோலை எல்லாம் பூக்கட்டும், மணக்கட்டும் எழில்கொஞ் சட்டும்! 'இன முழக்கம்" f364 மீரா கவிதைகள் 0 180