பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ه<C)میلاكم SSASASSBBSSSBBLSSSBSSSBSSSS SAJJBBSBBSAASAASAASAAAS SAASeSAASAASAASAASAASAASAAAS SMMAJJAJSAAAAASA SAASAASSJSSJSAASAMJ S MMSJABSBBSSBBSSSJSSSSJSSSSAAAASSSAS ><>・e○・○ss○・○oo○-○eo<>-○os○・○es○-○・e○-○・*< SJAMSJeBMJSBBSJAASJASJBBJJAAASAAAS புகழ் ஈட்டுங்கள்! வரலாற்றைப் பாருங்கள், கீர்த்தி மிக்க வளநாட்டுக் குரியவர்கள் நீங்கள்! இன்று தரங்கெட்டு மறங்கெட்டு மாட்சி கெட்டுத் தாழ்ந்ததையும் எண்ணுங்கள்; பின்ன ரேனும் அரமிருக்கும் கூர்மையினை அறிவில் தேக்கி அனற்காற்றை மூச்சாக்கிப் பருத்த தோளில் உரம்ஏற்றி வாருங்கள்; தமிழர் யாம்' என்(று) உலகுக்குக் கூறுங்கள்; புகழ் ஈட்டுங்கள் இலக்கியத்தின் பூந்தோட்டம் நீங்கள் வீரம் இசைபாடி நடமாடும் புறநானூற்றின் நிலையங்கள்; நீர்ச்சுழலை எதிர்த்துத் தள்ளி நீச்சலிடும் சுறாமீன்கள்; எருமைக் கூட்டம் கலக்கிவிட்ட குளம்போல உங்கள் நாட்டின் கவின்கெட்டுப் போவதுவோ? சாதி வைத்துக் குலத்துக்கோர் நீதியுரை கூறும் நூலைக் கொளுத்துங்கள் தீயிட்டுப், புகழ் ஈட்டுங்கள்! 187 0 மீரா கவிதைகள்