பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o உயிர்க்கேள்வி? கொடிதான் ஒருநாள் மலரவில்லை - எனில் கொஞ்சும் அதனெழில் குலைவதில்லை; விடியற் சேவல் கூவவில்லை . எனில் வெங்கதி ரோன்தொழில் விடுவதில்லை; பிடியை ஒருநாள் காணவில்லை . எனில் பெருவே ழம்பித் தடைவதில்லை அடி ஒரு நாள்உனை நோக்கவில்லை - எனில் ஆசைக் கனவுகள் மடிவதுமேன்? வாயொரு நாளே உண்ணவில்லை - எனில் வாழ்க்கை முடிந்து போவதில்லை; காயொரு நாளே கனியவில்லை . எனில் காட்டுக் கிளிகள் சாவதில்லை; பாயொரு நாளே பக்கமில்லை . எனில் படுக்கா திருப்பவர் யாருமில்லை; நீயொரு நாள்.எனை நெருங்கவில்லை . எனில் நெஞ்சில் காரிருள் படிவதுமேன்? 82 0 மீரா கவிதைகள்