பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்இனிக்கும் சுவைப்பழமே தொட்டால் செந்தேன் சுரக்கின்ற புதுமலரே கொடியே! உன்றன் கால்வலிக்கும் நெடுநேரம் நின்றால், என்றன் கண்வலிக்கும் அதைக்கண்டு கொண்டி ருந்தால்! வேல்வடிக்கும் கொல்லனுலை போலக் காலை வெங்கதிரோன் ஒளிபரப்பும் முன்னர், ஆசைப் பால்குடிக்க வேண்டுமடி காலம் பொன்! பொன்! பசிமார்பில் சாய்ந்திடடி வாடி” என்றேன் கட்டிலுக்குக் கூப்பிட்டேன்; வழக்கம் போலக் கண்சாடை செய்திட்டேன்; அவள் சிரித்தாள்! தொட்டிழுக்கப் பாய்ந்திட்டேன்; மான்போல் ஒடித் தூரத்தில் போய்நின்றாள்; 'அத்தான், நீங்கள் தொட்டிழுக்கத் தொட்டிழுக்க மயங்கி வீழும் தொடர்கதையை வளர்த்தால் நான் தானே மீண்டும் தொட்டிலுக்குப் பக்கத்தில் நிற்க வேண்டும்! தோள்வலிக்க நாள்தோறும் சுமக்க வேண்டும்! கட்டுப்பாட் டைவளர்க்க வேண்டும் என்ற கருத்துவழி யுளநீங்கள் நம்கு டும்பக் கட்டுப்பாட் டையும்.சிறிது கவனி யுங்கள்; காதற்பாட் டைத்தினமும் பாடி, மேனி ஒட்டும்பாட் டைக்கொஞ்சம் ஒதுக்கி வைப்போம்! ஒருமைப்பாட் டைத் தடுப்போம்! இல்லை யென்றால் கட்டுப்பாட் டைமீறிப் பிள்ளை பெற்றுக் கவலைப்பாட் டையன்றோ படிக்க வேண்டும்? மீரா கவிதைகள் 0 89