பக்கம்:முகவரிகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாவல்
ஒரு குடும்பத்தின் கதை
ஷெட்ரின். தமிழில் நா.தர்மராஜன்


மாபெரும் அக்டோபர் புரட்சி ருசிய மண்ணில் மட்டுமல்லாமல் உலகத்தின் மற்ற பாகங்களிலும் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் பொருளாதார சமூக வாழ்வோடு நின்றுவிடாமல் கல்வி, விஞ்ஞானம், கலை, இலக்கியம் போன்ற சகல துறைகளிலும் புதிய ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது.

புரட்சியில் மலர்ந்த சோவியத் கலைஞர்கள் காலங்காலமாக ஒதுக்கப்பட்ட உழைக்கும் மனிதனை உலகின் பார்வையில் நிறுத்தினார்கள்.

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/35&oldid=968491" இலிருந்து மீள்விக்கப்பட்டது