பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

11


அட்டை, சங்கு, நத்தை போன்ற உயிரினங்கள், உடலால் உணர்ந்தும், நாவால் சுவைத்தும், புரிந்து கொள்கின்றன.

அட்டை ஒன்று ஊர்ந்து போகிறது. ஓரிடத்தில் நாம் மெல்லத் தட்டுகிறோம். தெளிவாக ஊர்ந்த அட்டை சட்டென்று சுருண்டு கொண்டு, தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சிக்கிறது. ஆகவே, அட்டையறிவே ஈரறிவாக நாம் அறியலாம்.

3. மூவறிவுயிர்:

மூன்று புலன்களின் மூலம், இயற்கையுடன் வாழ்கின்ற வித்தையைக் கற்றிருக்கும் விந் தைமிகு உயிரினங்கள் இவை. இதற்கு உதாரணம். கரையான், எறும்பு போன்றவை.

தோல், நாக்கு, மூக்கு போன்ற மூன்று புலன்கள். உற்றறிதல், சுவையறிதல், நாற்றம் அறிதல் ஆகும்.

4. நாலறிவுயிர்:

மேலே கூறிய மூன்று புலன்களுடன், இரண்டு உணர்வுகளும் சேர்ந்து கொண்டு நான் காகின்றன. ஏறக்குறைய, பார்த்து, ரசித்து, ரசித்துப் புசித்து, ரசித்து சுவைத்து உற்றறியும் உயிராக இவை உலகில் உலாவருகின்றன.

இவற்றிற்கு உதாரணம் வண்டும். நெண்டும். வண்டு என்பது உங்களுக்குத் தெரியும். நெண்டு என்பது நண்டு. நெண்டுதல் என்பதற்குக் கிண்டுதல், தோண்டுதல் என்று அர்த்தம். நண்டு என்றாலே, நோண்டும் ஜீவன்தானே!