பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


விலங்குகளுக்கு இல்லாத, ஒரு விலை மதிப்பற்ற உறுப்பாக, எந்தச் சக்திக்கும் எட்டாத ஒரு சக்தியாகவே மனது படைக்கப்பட்டிருக்கிறது.

மனது என்றால் என்ன? மனது எதற்காக இருக்கிறது? என்ற ஒரு கேள்வியை எழுப்புவோர், மாநிலத்தில் நிறைய பேர் உண்டு.

உடல், மனம், ஆத்மா என்ற மூன்றும் சேர்ந்ததுதான் நமது மெய்.

உடல் என்பது, இயற்கையின் அன்றாட இயல்புக்கேற்ப தன்னை அனுசரித்தவாறு உலக வாழ்க்கையை நடத்திச் செல்ல உழைக்கும் வல்லமை உடையது.

மனம் என்பது, உடல் இப்படி இயங்க வேண்டும். இப்படி ஒதுங்க வேண்டும் என்று கட்டளை இடுவது. பத்திரமாகப் பணியாற்ற உதவுவது.

ஆத்மா என்றால் காற்று என்று அர்த்தம். இங்கே உடல் முழுவதும் உள்ள உயிர்க்காற்றே ஆத்மா என்று அழைக்கப்படுகிறது.

உயிர்ப்பை உண்டாக்குகிற உயிர்க் காற்று, உடலுக்கு வலிமையையும், மூளைக்கு வல்லமையையும் அளித்து ஆற்றுப்படுத்துவதால், அதற்கு ஆற்றுமா என்று பெயர் தந்தனர். அதுவே கால வழக்கில் ஆற்றுமா ஆகி, பிறகு ஆத்மாவாக மாறி வந்து விட்டது.