22
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
இந்த ஆத்மா என்ற சொல்லை வைத்துக் கொண்டு தான், மதவாதிகள் எல்லாம் மக்களை மயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் தொழுது மண்டியிட வைத்திருக்கின்றார்கள். மரண பயத்திலிருந்து மாறாமல், மீளாமல், வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
நம் உடலை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம். உடல், மனம், ஆத்மா என்பதுதான். இந்த மூன்று கூறுகளின் சீர்மையைக் கொஞ்சம் பகுத்துப் பார்க்கலாம்.
இந்த உலக வாழ்க்கைக்கு, உகந்தாற் போல், செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சிறப்பான அமைப்புக்கு உடல் என்று பெயர்.
எப்படி எப்படியெல்லாம் உடல் இயங்க வேண்டும் என்று ஆணையிட்டு, காரிய மாற்ற வைக்கிற ஒரு பொறுப்பான அமைப்புக்கு மனம் என்று பெயர். அதாவது அழகாக சிந்திக்கிற அமைப்புக்கே மனம் என்று பெயர்.
இளைக்காமல் களைக்காமல் எப்போதும் உடல் இருக்க வேண்டும். தவிக்காமல், தகிக்காமல் யூகத்தோடு வியூகம் அமைத்து இயக்க வேண்டும் என்று இந்த இரண்டு அமைப்புகளையும் ஆற்றுப்படுத்துவதற்குரிய ஒரு அமைப்புக்குப் பெயர்தான் ஆத்மா.
ஆத்மா என்பது வேறொன்றுமில்லை. காற்று என்பதுதான் அதற்கு அர்த்தம்.
ஆற்றுமா என்பதுதான் ஆத்மாவாக மாறிவிட்டது என்பது என்னுடைய கருத்தாகும்.