இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
த்வைதம் என்பது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் தனித்தனி எனும் கொள்கை உடையது.
நாம் மதங்களுக்குள் மடங்கி விடாமல், நாம் நன்றாக வாழ வேண்டி, ஆத்மா என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்வோம். அற்புதமான ஆத்மாவாகிய உயிர்க்காற்றை, ஆண்டு அனுபவித்து மகிழ்வோம்.
முக அழகைக் காப்பது எப்படி என்பதற்கும் ஆத்மாவுக்கும் என்ன சம்பந்தம் உண்டு என்ற சந்தேகம், இந்நேரம் உங்களுக்கு வந்திருக்குமே!
உடல் முழுவதும் உயிர்ப்புச் சக்தியுடன் உலாவருகிற உயிர்க்காற்றுதான், உடலுக்கு அழகைத் தருகிறது. உள்ளத்திற்கு எழிலைத் தருகிறது. முகத்திற்குத் தெளிவையும், பொலிவையும் தருகிறது.