பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 இவ்விரண்டினுள் ஏதேனும் ஒன்று மட்டும் இருந்து விட்டால் போதாதா என்று துடிதுடிப்பவர்கள் உளர். அவர்கள் குழந்தை பெறுவதற்கு மனைவிதானே இன்றி யமையாதவள், கணவன் எதற்கு? என்று கேட்பவர்கள். கவிஞர் முடியரசன் தமிழ் இலக்கிய இலக்கணங்களே முறையாகப் பயின்றவர்; தம் வாழ்வை ஆழ்ந்த உணர்ச்சி களின் கோவையாக்கி, அதனல் தமது மனத்தை மிக்க மென்மையும் துண்மையும் உடையதாக்கிக் கொண்டவர். பிறருடைய உள்ளத்தில் தம்முடைய உணர்ச்சிகளே எதி ரொலிக்க வைக்கும் இணையற்ற ஆற்றலும் வாய்த்தவர்; இதனுல்தான் இவரைப் புதுமைக் கவிஞர்' என மக்கள் போற்றுகிருர்கள். இவரது கவிதைகளைத் தமிழ்க் கருவூ லத்திற்கு முடியரசர் தந்த காணிக்கை எனப் புகழ் கிருர்கள்! | || எம்மைப் போலக் கவிஞரும் உளரோ?' எனச் சிலர், எழுதப் புறப்படும் போதே கேட்கிருர்கள். அவர்கள் கேள்வியில் உண்மையும் இருக்கிறது. பொதுவாக, கவிஞனுக்கு இலக்கியப் பரம்பரை உணர்வு ஒன்று வேண்டும். எத்தனே எத்தனையோ நூற் ருண்டுகளாக வருகின்ற கவிஞர் பரம்பரையிலே தானும் ஒருவன் என்ற எண்ணம் வேண்டும். பழைய மரபுகளே’ வெட்டிச் சாய்க்கப் புறப்படாமல் ஒட்டிக் காக்க முற்படு கிற பழக்கமும் வேண்டும். + பழங்காலக் கவிஞர்களே யெல்லாம் இழித்துப் பேசி விடுவதாலும், தம் காலக் கவிஞர்களேயெல்லாம் பழித்து