பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12



"கொஞ்சுமொழி வஞ்சி! எனைத் திருத்தி விட்டாய்

கூறுவதைச் செயலுக்குக் கொணர்வேன்;நம்பால்

தஞ்சமென வந்தவரின் சூழ்ச்சி யாலே

தமிழ்வழங்காக் கோவிலுள்ளே தலையைக் காட்டேன்

எஞ்சியுள குழந்தைக்குத் தமிழ்ப்பேர் வைப்பேன்

இப்படியே என்வீட்டைத் தமிழ்வீ டாக்க

வஞ்சினமும் கொள்கின்றேன்' என்று சொன்னேன்,

வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்; ஏன்சி ரித்தாய்?'

13

என்றேன்நான்; கோவிலுக்குப் போகா விட்டால்

இனியதமிழ் எழுச்சிபெற்று விடுமா என்ன?

நன்றத்தான்! தமிழ்நாடும் கோவில் மன்றும்?

நாதியற்ற சொத்தா?உம் சொந்த மன்றா?

வென்றந்த உரிமை பெற வீரம் இல்லை?

ஏனத்தான் வீண்பேச்சு? போதும் போதும்!'

என்றுரைத்தாள்; தோழர்களே! உம்பாற் சொன்னேன்

என்செய்யப் போகின்றீர்? ஆய்ந்து சொல்லும்!