பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

தென்னாட்டு திறன்முழுதும் பொருந்தக் கண்டு
திருடினரோ வடக்கத்தித் திருடர் தாமும்!
நின்வீட்டுப் புறக்கணிப்பால் இங்கு வந்தோர்
நிகழ்த்தியபொய்ச் சதியோஎன் அகத்து வாழ்வாய்!
என்பாட்டுக் குரியவளே! கவலை கொள்ளேல்
எழில்மிகுத்துக் காண்பதற்கு நான்மு யன்று
பொன்காட்டும் அப்பணிபோல் பலவும் செய்து
பூட்டுகிறேன் பூட்டுகிறேன் காதல் நல்லாய் !