பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் தந்தை எண்சீர் விருத்தம் 1 தீமைதரும் தமிழ்ப்பகைவர் தம்மைச் சார்ந்து திருநாட்டின் பெருமையினே, தமிழ்ப்பண் பாட்டை ஏமமுறும் இலக்கியமாம் செல்வங் தன்னை இத்தனையும் அழித்தொழித்தோம்; அந்த நாளில் ஊமைஎன இருந்தான? இல்லை இல்லை; உயர்தந்தை கடமைகளை உணர்ந்த மேலோன் தீமைஎன இடித்துரைத்தான் பகைவர் தம்மைச் சேராதீர் எனப்புகன்ருன் எங்கள் தங்தை 2 இனிமைமிகு தமிழ்மொழியைப் படித்தல் இன்றி இங்குவந்த சழக்கரையே கூடி நின்று கனிவுதரும் அவர்பஞ்சப் பேச்சில் சிக்கிக் கண்கலங்கி நின்றிருந்தோம், அந்த நாளில் நனியன்பு மிக்கநல்லான் 'மக்காள்! அந்தப் புல்லுருவி நாடாதீர்! உறிஞ்சித் தீர்ப்பர் இனிஉங்கள் தமிழ்பயில்வீர்” என்றே எம்மை இடித்துரைத்துத் திருத்தினன்காண் எங்கள் தங்தை 153