பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சம் கலந்த தாய் அறுசீர் விருத்தம் 1 பெயருடன் தருமம் சேர்ந்த

பேருளத் தம்மா! நின்றன்
செயலிலும் தருமம் கண்டோம்
செம்மையின் திறமும் கண்டோம்
மயலுறும் இளைஞர் மாதர்
வாழ்வினில் உய்தல் வேண்டி

முயன்றதும் கண்டோம்; காளை

அவர்க்கென முயல்வார் யாரே?

2 மாணவர் மன்ற மென்னும் .

வளரிளங் குழந்தை யின்று

காணெழில் கூர்ந்து காளைப்

பருவமாய் நிற்குங் காலே,
பேணிய செவிலித் தாயே!
பெருமுது கிழவன் நற்ருய்

காணவன் மயிலே முத்து

கலங்கிடப் பிரிந்தாய் அந்தோ!

310