இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நெஞ்சம் கலந்த தாய் அறுசீர் விருத்தம் 1 பெயருடன் தருமம் சேர்ந்த
- பேருளத் தம்மா! நின்றன்
செயலிலும் தருமம் கண்டோம்
- செம்மையின் திறமும் கண்டோம்
மயலுறும் இளைஞர் மாதர்
- வாழ்வினில் உய்தல் வேண்டி
முயன்றதும் கண்டோம்; காளை
- அவர்க்கென முயல்வார் யாரே?
2 மாணவர் மன்ற மென்னும் .
- வளரிளங் குழந்தை யின்று
காணெழில் கூர்ந்து காளைப்
- பருவமாய் நிற்குங் காலே,
பேணிய செவிலித் தாயே!
- பெருமுது கிழவன் நற்ருய்
காணவன் மயிலே முத்து
- கலங்கிடப் பிரிந்தாய் அந்தோ!
310