சாருத லின்றித் தனிமையை நாடிச் சிந்தனை முகத்தில் தேக்கின னகி நந்தின் சினைகள் சிந்திய ஒருபால் புந்தியில் அலைகள் புரள இருந்தனன்; "என்மனங் கவர்ந்தோய்! யாதுற் றனைகொல் ? |கின்முகஞ் சோர்வு றின் என்னுளஞ் சோர்வுறும் இந்திர விழாவில் வந்தோர் யாரும் நொந்திலர் மகிழ்வைச் சிங்தையில் தேக்கினர் நாமுங் களிப்போம் வா'வென விேச் சுதமதி யாழினைச் சுருதி கூட்டினள், புதுவகைச் சுவையெலாம் பொருந்தப் பாடிக் கான இன்பக் காதல் ஊட்டினள், ஆனே யாழில் அவலம் மீட்டினன், மாருத வேகன் மாறின. கைக் காரிகை கலங்கினள்; "காதலி I இசையில் அவலம் காதல் அனைத்தும் சுவையே கவலை நினக்கேன் ? கைவிரல் ஒட்டி மீண்டும் யாழினை மீட்டுதி கண்ணே ! காண்டும் இன்பங் களிஉல கதனில் ’’ என்றனன் ; தோகை எடுத்தனள் யாழை ஒன்றிய குரலால் உள்ளம் உருக அவலச் சுவையே அவளும் பாடினள் : திவவுக் கோல்யாழ் தெரிநரம் பிடையே சுவைசெய் சிறுவிரல் துடிப்புடன் தடவி முடிகிலே யுறுங்கால் முறிந்ததோர் நரம்பே இடியொலி கேட்டெனத் துடியிடை நடுங்கி இதய நரம்புதான் இற்ற தோவெனப் 1 * பதறினள் ; அஞ்சேல் பாவாய் ' என்றனன் இருப்பினும் அவள்மனம் ஒருப்பட வில்லை : 16 75 80 85 90 100
பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/46
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை