பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

கிளர்ச்சிசெயும் தொண்டர்களின் உணர்ச்சி வெள்ளம்
கெடுவழியில் செல்லாமல் தடுத்து நன்கு
 வளர்ச்சிபெறச் செய்கின்ற தலைவன் போல
வருவெள்ளப் பெருக்கனைத்தும் பாழ்ப டாமல்
அளப்பரிய நன்மைசெயத் தடுத்து நிற்கும்
அணைக்கட்டின் அழகைப்பார்! மனிதன் ஆற்றல்
 விளக்குகிற செயலதுவாம்; இயற்கை எல்லாம்
வெறோளும் மனிதர்திறம் என்னே! என்னே!!
16
ஒருதுறையில் ஆண்பாலர் மற்றோர் பக்கம்
உயர்மாதர் நீராடும் காட்சி யைப்பார்!
கருமுகில்வங் தமர்ந்ததுபோற் கிடந்த யானை
கழுவுகின்ற பாகனையும் அவனைச் சூழ்ந்து
 சிறுவர்பலர் நீ்ரிறைத்தே ஒடி ஆடிச்
செய்குறும்பும் காணடிநீ! இந்த ஆற்றில்
ஒருசாதிக் கொருதுறையுண் டென்ற கொள்கை
ஒழிந்ததையும் பாரடிநீ! செல்வோம் வாவா!