பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

மனமுடைந்து வீடடைந்து மாடி யேறி
மலர்பரவு பஞ்சணையில் புரண்டி ருந்தேன்‌
எனை மறந்த அவள் தந்த இன்பம் போன்ற
இன்சுவைப்பால் அருந்தியபின் கசந்த தாலே
 சினமடைந்தேன்;முழுநிலவு கார்கி ழித்துச்‌
சிறிதாகச் சாளரத்துள் கதிர்வீ சிற்றே
அனநடையாள் என்னருகே இன்மை யாலே
அதன்பாலும் அழகில்லை இன்பம் இல்லை !