பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை :

அழகின் சிரிப்பு

அலைகடலின் அப்புறத்தே ஒரக் கோட்டில் அடரிருளே அகற்றியபின் கிழக்கு வானில் கலையாத செந்நிறத்தைப் பூசி விட்டுக் காதலியைக் காணவரும் காத லன் போல் தலைகாட்டிக் கதிரவன்தான் சிரித்துக் காட்டும் தன்மையினில், மகிழ்வூட்டும் அழகு தன்னில், கலையழகு சிரித்துவிளே யாடக் கண்டு கழனிகளின் வரப்போரம் நடந்து சென்றேன் (க)

முழந்தாளிற் கையூன்றிக் குனிந்து கின்று முன்தானே எடுத்திடையில் இறுகக் கட்டிச் சுழன் ருடும் குழல்மாதர் கால்வ யிற்றுச் சோற்றுக்கு நாற்றுகடும் போது தன்னல் எழுந்தாடும் கையசைவில், வீட்டுக் காரன் ஏர்பிடித்துக் களேத்திருப்பான் என்று சொல்லி விழுந்தோடி உணவுகொண்டு வந்த பாவை விளையாடி உணவூட்டும் காட்சி கன்னில் (2-)