பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்சேந்தி கிறைத்தகுடம் இடுப்பில் வைத்து நெளியஒரு கைவிசிச் செல்லும் சிற்றுார் சேர்மாதர் மென்னடையில், குருவி காக்கை செழுங்கதிரைத் தின் மைல் காப்ப தற்கு வார்தொடுத்த கவண்வி சிக் கூவுங் காலை வாயெழுப்பும் இசைக்குரலில், மண்ணே வெட்டி நீர்கட்டும் தொழிலாளி நீள்பு யத்தில்

கின்று நடம் செய்கின்ற அழகைக் கண்டேன் (ங்)

கால்முளேத்த தாமரையின் மொக்குள் போலக் காட்சிதரும் குஞ்சுகள்தம் வாயில் கோழி வேல்மூக்கால் அன்புகலந் திரையை யூட்டும் வேளையிலும், வானத்து வீதி செல்லும் பால்நிலவுப் பெண் தனது விண்மீன் என்னும் பல்விரித்துச் சிரிக்கின்ற போதும், மண்மேல் கால் இழுத்துத் தவழ்கின்ற குழந்தை பேசும் காலத்தும் நல்லழகின் கிரிப்பைக் கண்டேன் (ச)

வெம்புலியின் பாய்ச்சல்தனில், விரன் எந்தும் வேல் நுனியில், தோள் வலியில், படம்வி ரித்து வெம்பி எழும் நாகத்தின் ஆட்டங் தன்னில், விரிகொம்பு மான்விழியில், தேனே உண்ணத் தும்பிஎழுந் தார்க்கின்ற முல்லேக் காட்டில், தோகைவிரித் தாடுகின்ற மயிலி டத்தில், செம்பவழக் கொடிக்கடலின் அலேக் கூட்டத்தில் சேர்ந்திருக்கும் அழகெல்லாம் சிரிக்கக்கண்டேன்; (டு

10