பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர்மிகுந்து நடுக்கமுறின் மணந்தளர்வாள்

கொணர்ந்திடுவாள் ஞாயி றென்னும் ஒளிநெருப்பை குளிர்காய்வேன், அதன்பின்னர்

மலர்க் காட்டுள் ஒடி ஒடி நளிமலருள் நிறைமணத்தை வாரிவந்து

நான்மகிழ உடலிற் பூச அளிதென்றல் உருவோடு வருவாள்தன்

அன்பினத்தான் உரைத்தல் ஆமோ ? (சு)

படித்திடுக எனச்சொல்லிக் குயிலினங்கள்

பசுங்கிளிகள் இவற்றைத் தந்தாள்; பிடித்தவற்றைப் பார்க்கையிலோர் அறங்கண்டேன்;

பேசுமொழி சொந்த மேயாம் அடுத்தவற்றின் குரலல்ல நீயுமுன்றன்

அனே மொழியால் பேசு பாடு !! தடுப்பவர்யார் ? என்றன.அவ் வேடுகள்தாம்

தாயேதாய் மொழியே வாழ்க ! (எ)

விண்ணரங்கிற் கருமுகிலாம் திரைநீக்கி,

விதவிதமாய் வானம் பாடி பண்ணிசைக்க, ஒளிவீசிப் புடைசூழும்

பல்வகையாம் மீனப் பெண்கள் கண்சிமிட்டி உடனட, முழுநிலவுக் காரிகையும் நடனம் ஆட மண்ணகத்து மகவெல்லாம் களிகொள்ள

மனம்வைத்தாள் என்றன் அன்னே (அ)

14