பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீன்பிடித்துக் காதலன்தான் மீள்தல் கண்டு மீள்வாரோ ? மீளாரோ ? எனத்த ளர்ந்த மான்படித்த பார்வையினுள் அகத்துள் பொங்கும் மகிழ்ச்சிஎலாம் வெளிக்காட்டும் முகத்தி டத்தே தான் நடித்தாள் எழிலனங்கு தந்தை முன்னர்த் தள்ளாடி நடந்தோடி அப்பா ! என்று தேன்வடித்த சொல்லாலே குழந்தை கூவத் திரும்பினவன் முகத்தகத்தும் எழிலைக்கண்டேன் (சு)

கொடிதாங்கி உரிமைப்போர்க் களத்துச் சென்ற குமரனவன் உயிர்நீங்க ஆள்வோர் தந்த அடிதாங்கித் தலைபிளந்து கொட்டும் செந்நீர், அடிமை எனும் சிறுமையினே அழிப்பான் வேண்டி கெடிதோங்கும் பிறட்ைசி தொலைக்கும் போரில் கின்றிருந்த பெரியோன் தன் அகன்ற மார்பு வெடிதாங்கிச் சிந்துகின்ற குருதி, யார்க்கும்

விளங்காத எழில்காட்டக் கண்டேன் கண்டேன் (எ)

" மனவிருளே அகற்றிடுக சிந்தித் தாய்க ! மறைப்பின்றி உரைத்திடுக ! இங்வன் செய்யின் நனவுலகில் மனிதரென வாழ்வோம்!” என்று நவின்றவனே அடைத்திடுக கொடுஞ்சி றைக்குள்’ எனவுரைத்துக்கொடுநஞ்சைக்கொடுத்தான்வேந்தன்; எனதுயிரிற் பெருங்கொள்கை விடுதல் ஏலேன் சினவுயிரை விடுதல்எனக் கெளிதாம்' என்று செப்பிஅவன் குடித்தெறிந்த கிண்ணத் துள்ளே (அ)

18