பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலவணங்கே ! உனேக் கதிரோன் கூடுங் காஜல் நீலமுகிற் குழல் தளரக் கட்ட விழ்ந்து பொலபொலவென் றுதிர்ந்தநறு மலர்கள் தாமோ பூத்திருக்கும் விண்மீன்கள் ? வானம் நீங்கள் நலம் நுகரும் பஞ்சனேயோ ? கதிரோன் எங்கே நடந்துவிட்டான் உதிர்மலரை மீண்டும் சேர்த்துக் குலமாலை யாக்குதற்கு மின்னல் காணக் கொண்டுவரச் சென்றனனே ? கூருய் தோழி ! (சு)

வானத்துத் தாயென்பாள் கதிரோன் என்ற வம்படித்து விளையாடித் திரியும் சேயைச் சினத்துச் சிறு கிளியே செங்க ரும்பே ! செய்யாதே விண்வம்பு, புசிக்க வாவென் றேனத்துச் சோறிட்டாள்; சிறுவன் ஒடி எற்றிவிடச் சிதறியவெண் சோறு போல மீனத்துக் குழுவெல்லாம் விளங்கும் வீழ்ந்த வெள்ளித்தட் டாமென்ன நிலவு தோன்றும் (எ)

முகிலென்னும் துகிலுடுத்தி நாணம் ஓங்க முகம்மறைத்துச் செல்கின்ற பெண்ணென் பேனே ? நகில்கொண்ட அல்லிப்பெண் முகம லர்ந்து நகைகாட்டப் பிறரெவரும் அறியா வண்ணம் பகல்மறைந்து முகில் நுழைந்து செல்லு கின்ற களவொழுக்கத் தலைவனெனப் பகரு வேனே ? மிகுவிண்மீன் வயிரங்கள் கொள்ளே கொள்ள

முகில்பதுங்கும் திருடனென விளம்பு வேனே ? (அ)

22