பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு

Ο

பகல்முழுதும் வேயில்காய்ந்து மேற்பாற் சேரும் பகலவனே வழியனுப்பிக் கீழ்ப்பால் திங்கள் முகமெழுப்பும் வேளே.தனில் மகிழ்வு கூட்ட முரணில்லா யாழெடுத்தாள் காதல் நல்லாள்; முகம்சுழித்தேன்; ஏனென்ருள் ?: கவிதை யாக்க முயல்கின்றேன் போட முனைதல் நன்ருே ? தகவிதுவோ?’ எனவுரைத்தேன்; யாழை வைத்தாள் தளிர்க்கரத்தாய் ! என்னுடன்வா' என்றழைத்தேன்

(5)

அவளுடன்நான் கற்பனையில் மிதந்து சென்றேன் அத்தான் ! ஒர் ஐயமுண்டு செய்யுள் யாக்கக் கவலைதரும் இலக்கணமேன் வேண்டும்?' என்ருள்; 'காரிகையே ஆற்றுக்குக் கரையேன் வேண்டும்? சுவர்போலும் கரையிலேயேல் ஆற்றின் தன்மை என்னுகும் சொல்லிடுக ! ஊர்பாழ் அன்ருே ? அவமின்றி மொழிவிளங்கக் கவிதை என்னும்

ஆற்றுக்கும் இலக்கணமோர் கரையே யாகும்: (உ)

27