பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்தென்று கூறுகையில் பழைய எண்ணம் வாட்டுதடி ! நம்முன்னேன் ஆட்ட ணத்தி, காழ்த்தபகை நீக்குவிறல் சோழன் பெற்ற கனிஆதி மருதியுடன் ஆற்று வெள்ளம் ஆழ்த்திவிடும் என்றுணரா தாடச் சென்ருன்; அவள் கண்ணிர் ஆருக அவளேக் கொன்ற பாழ்த்துறைபார்! இலக்கியமாம் ஏட்டுச் செல்வம்

அழித்தொழித்த பதினெட்டாம் பெருக்கை யும்பார் ! (கூ)

கடிதோடும் வெள்ளத்தால் ஊரின் செல்வம் கரையின்றி அழிந்தொழியக் கண்டு நொந்து முடியரசன் கரிகாலன் மக்கள் வாழ்வு | முந்துறவே இருமருங்கும் எழுப்பித் தந்த நெடிதோங்கு கரைகளேப்பார் ! அவனின் றில்லே நிலைத்துகின்ற தவன் பணியே ஆத லாலே படியாள்வோர் புவியாட்சி மாறும் உண்மை

படித்திடுக ! பயனுள்ள செயலே செய்க ! (i))

உருக்குலைய உழைத்துழைத்துச் செல்வம் இல்லா உழைப்பாளர் வாழ்வினப்போல் வறண்டுதோன்றும் பெருக்கில்லாக் காட்டாறு காண்பாய் ! ஈகை பேணுத பெருஞ்செல்வர், மிடியால் வாடி இருப்பவர்க்குப் பயனில்லா தொழிதல் போல எரிகதிரால் வதைந்தவர்க்கு கிழலொன் மீயா திருக்குமரம் கரைகளிற்காண் ! வறுமை யுற்ருேன்

இளமையைப்போல்வதங்குசெடிகொடிகள் காண்பாய்!

30