பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்கணவன் எங்குள் ளான் என்று தேடிக் கதறிக்கொண் டோடுகின்ற ஆற்றுப் பெண்ணுள் தொடக்கண்டு பெருங்கடலோன் அலேக்கை நீட்டித் தோள்தொட்டான், மகிழ்வுற்ருள், பிரிவுத் துன்பம் விடக் கண்டாள், ஒன்ருகக் கலந்து விட்டாள்; வேறிடத்தே பிறந்துளநீ அறியா என்பால் கடைக் கணித்துக் கலந்துவிட்டாய்! ஆறும் எங்கோ உருவெடுத்தும் கடலோடு மணத்தல் காண்பாய் !

(ിള്ള) முப்பதுநாள் தமிழ்சொல்லிப் பள்ளிக் கூட முதல்வர்.தரும் ஊதியத்தைக் கடனுக் கெல்லாம் ஒப்படைத்துப் பதினேந்து நாட்கள் ஒட்டி ஒழிந்தசின்னுள் என்செய்வேன் என்ற எண்ணம் கப்பிடநீ அருள்சுரந்துன் அன்னே தந்த காப்பளித்துக் காப்பளித்தாய் ! அதுபோல் வானம் தப்பியதால் பெருக்கற்றும் ஊற்று நீரால் தரணியினேக் காக்கின்ற ஆறு காண்க ! (பிங்)

மலைமீது தோன்றிப்பின் அருவி யாக மன்னர்பகைப் போர்முரசம் என்ன ஆர்த்து கிலேயாமல் ஓடிப்போய்க் கரையே யில்லா ர்ேக்கடலில் மறைகின்ற ஆறு கண்டேன்; உலையாத உண்மைகண்டேன்; உலகில் தோன்றி உருப்பெற்ற பொருள் ஒருநாள் மறைதல் உண்மை கலைமானே மறைவதன்முன் மக்கள் வாழ்வைக்

காக்கின்ற ஆற்றைப்போல் கடமை செய்க (செ)

31