பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளர்ச்சிசெயும் தொண்டர்களின் உணர்ச்சி வெள்ளம் கெடுவழியில் செல்லாமல் தடுத்து நன்கு வளர்ச்சிபெறச் செய்கின்ற தலைவன் போல வருவெள்ளப் பெருக்கனேத்தும் பாழ்ப டாமல் அளப்பரிய நன்மைசெயத் தடுத்து கிற்கும் அனேக்கட்டின் அழகைப்பார் மனிதன் ஆற்றல் விளக்குகிற செயலதுவாம் ; இயற்கை எல்லாம் வென்ருளும் மனிதர் திறம் என்னே என்னே !!

(விடு)

ஒரு துறையில் ஆண்பாலர் மற்ருேர் பக்கம் உயர்மாதர் நீராடும் காட்சி யைப்பார் ! கருமுகில்வந் தமர்ந்ததுபோற் கிடந்த யானே கழுவுகின்ற பாகனேயும் அவனைச் சூழ்ந்து சிறுவர்பலர் நீரிறைத்தே ஒடி ஆடிச் செய்குறும்பும் கானடி, ! இந்த ஆற்றில் ஒரு சாதிக் கொருதுறையுண் டென்ற கொள்கை ஒழிந்ததையும் பாரடி!ே செல்வோம் வாவா ! (சுெ)

32