பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல்

குழந்தை இன்பம்

"பாய்ந்தோடும் அருவிமலைப் பக்க மெல்லாம் பல்வண்ணப் பூக்களிலே மென்மைத் தென்றல் தோய்ந்தோடி வந்துடலில் வருடும் போது சொல்லரிய இன்பமன்ருே ? அருமை அத்தான் ! ஆய்ந்தெடுத்த யாழெடுத்துப் பாடு கின்றேன் அருகினிலே வாரும்,அதோ பாரும் வானில் வாய்ந்தொளிரும் வெண்ணிலவு 1 இன்பம்! இன்பம் ! வரம்புண்டோ?' என்றுரைத்தாள் துணைவி கல்லாள்(க)

"வெண்முகில்சூழ் மலேமுகடும், முகட்டி னின்று வீழ்ந்ததிரும் அருவிகளும், வண்ணப் பூவால் கண்கவரும் செடிகொடியும், கொடிகள் தாவிக் கட்டுகின்ற மரத்தொகையும், தென்றற் காவில் பண்சொல்லும் வண்டுகளும், மாலை வானில் படர்கின்ற செங்கிறமும், காதல் கங்காய் ! விண்மதியும் தருமின்பம் என்றன் பிள்ளே விளையாடும் காட்சிதரும் இன்பம் ஆமோ ? (2-)

38