பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படியோ ஒருப்பட்டாள் விரைந்து செல்லும் புகைவண்டி ஏறிப்போய் ஊரை நோக்கித் தப்பெதுவும் கேராமல் நடந்து சென்ருேம் தழைத்துள்ள வயல்வாப்பில் கடக்குங் காலே "அப்பப்பா நல்லவழி' என்று சொல்லி அகம்நொந்து முகஞ்சுழித்து நடந்து வந்தாள்: "இப்படிவா என்றவள்கை பற்ற ஐயோ!'

என்றழுதாள் என்னென் று பதறிக் கேட்டேன் (.)

மென்காலில் முள்தைத்த தென்ன, கெஞ்சில் வேல்குத்திக் கிழித்ததுவே ருென்றும் பேசா தென் காதல் மிகுதியில்ை குனிந்து முள்ளே எடுத்தவளை "வருந்தாதே மன்னிப் பாய்ே என்மீது சினந்தனையோ ? இனிமேல் இங்கே வருமெண்ணம் இல்லை இல்லை" என்றேன் பாவை "என்னென்ன சொல்லுகிறீர் அத்தான்! நீங்கள் இருக்கின்ற இடமேதான் இன்பப் பூங்கா !' (SP)

என்றெழுந்து கின்றுகொண்டாள் ஒடிந்த உள்ளம் இனிதுமகிழ்ந் தெழுந்துவழி நடந்தேன் பின்னர் குன்றனய தோள்பற்றிக் கெந்திக் கெந்திக் குளிர்மொழியாள் நகையாடி நடந்தாள், கண்ணே! இன்றெனது மனம்கொங்து பதறி விட்டேன்' என்றவுடன் 'ஆடவரே அப்ப டித்தான் ஒன்றுமிலா தஞ்சிடுவார்' என்று சொன்னுள் உள்ளங்கள் பரிமாறிச் சென்ருேம் மேலும் (டு)

42