பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூண்டுக் கிளி

கனிமரப் பூம்பொழில் களிப்புடன் சேர்ந்தே இனிதென வதிந்தேன், இடரொரு சிறிதும் உற்றே னல்லேன், உரிமை யாவும் பெற்றே வாழ்ந்தேன் பெரும்பகை யின்றி ; எங்கோ பிறந்தான் எங்கோ வளர்ந்தான் இங்கே வந்தான் என்னேயும் கண்டான் வலையினே விரித்தான் வளத்துடன் வாழ்ந்த கிலேயினே இழந்தேன், நீள் சிறைக் கூண்டுள் அடைத்தான் என்னே அஞ்சிறை வெட்டி ; அடைத்தனன் ஆயினும் அருங்கனி தருவான் பாலுங் கொணர்வான் பசியே இல்லை ; ஆலும் வேம்பும் ஆமோ அச்சுகம் ? அடிமை வாழ்வு கொடிது ! கொடிது ! விடியா தோகான் விடுதலை பெறவே ? துடையா ரோஎன் துயரினே ? எனவே அடியாய்த் துடித்தேன் துவண்டதென் உள்ளம் , வடியாக் கிளவி வழங்கும் சிறுவன்

படியாப் பருவம் பழுதிலா உள்ளம்

56