பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்த தோற்றம், மலரும் முகம், கவர்ச்சி தரும் மீசை, துருவும் கண்கள், சுருண்ட முடி இவற்றுடன் திறந்த நெஞ்சம், சிங் திக்கும் பழக்கம், சிரிக்கவைக்கும் பேச்சு, பழகும் பண்பாடு - இவர்தான் முடியரசன். அவர் தோற்றத்தை அப்படியே அவர் கவிதைகளிலும் கானும் போது அன்று முடியரசர் நாட்டிலே தமிழ் வளர்ங் தது. இன்று முடியரசன் நாவிலே தமிழ் வளர்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

"இலக்கணம், சீர், தளை கட்குக் கட்டுப்படாதவனே கவிஞன்”, என வால்ட்விட்மன் கூறியதாக, தமிழ் இலக்கணத்தைத் தாறுமாருக்கிக்கொண்டு வளர்ந்து வரு கிறது ஒரு காக்கை பிடிக்கும் கவிஞர்' கூட்டம். செல் வாக்குள்ள்வர்களின் சிறுமைக்குக் கட்டுப்படலாம்; பத்தி ரிகை ஆசிரியர்களின் விளம்பரப் பகட்டுக்குக் கட்டுப் படலாம்; இலக்கணத்திற்கு மட்டும் கட்டுப்படக் கூடாதாம் : வால்ட்விட்மன் கூறியதிலே உள்ள உண் மையை இவர்கள் உணரவேண்டும். கவிஞன்தான் இலக் கணத்திற்குக் கட்டுப்படக் கூடாதே தவிர, கவிஞனுக்கு இலக்கண்ம் கட்டுப்படாமல் போய்விடக்கூடாது ! இத் தகைய புதுமைக் கவிஞர்களை'ப் பார்த்து முடியரசன் பாடுகிருர்,

இலக்கணத்தைப் புதைத்துவிட்டுக் கூவு கின்ருர் ஒப்பாரிக் குரலெடுத்து ' என்று இலக் கணத்தைக் கொன்றதோடு வி ட வி ல் லை யா ம் இ வ ர் க ள். பு ைத் த் து வி ட் டு ப் பக்கத்திலேயே உட்கார்ந்து ஒப்பாரியும் வைக்கிருர்களாம் 'கவிதை' யென்று ! எவ்வளவு நயமான கண்டனம்! முடியரசன் பாடல்களை வெள்ளைக் கவிகளென நினைத்து,உள்ளத்தை மூடிவைத்துவிட்டுப் புத்தகத்தைத் திறக்காதீர்கள். வரிக்கு வ்ரி, சொல்லுக்குச் சொல் நயம் உண்டு, கேலியும் கிண்ட லும் உண்டு, உட்பொருளும் உண்டு எனவே உணர்ந்து, நிறுத்தி, கின்றுபடிக்கவேண்டும்.

முடியரசன் தாமே தம் பாடல்களைப்படித்துக் காட்டும் போது குரலிலும், கவிதையிலும், உச்சரிப்பிலும் கம்பீரம் தவழும் அவர் தம் பாடற்கருத்தை விளக்கும் போது கயங் கூறுவார், சுவை கொள்வார். கவிஞன் முதல்தரச் சுவை யறிஞளுகவும் இருத்தல் வேண்டும். தம் பாடல்களைத் தர்ம்ே திரும்பிப்பார்க்கக் கூசுவோரும் உண்டு 'விசுவா மித்திரர் பரம்பரை போல ! - -