பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதிரை நினைத்தால்...?

கத்திரியால் அழகுசெய்த பிடர்கி மிர்த்துக் கடிவாளம் கவ்விச்செல் புரவி மீது மெத்தையமைத் தோரிளேஞன் அமர்ந்தி ருந்தான் மெதுவாகச் செல்லமனம் ஒருப்ப டாமல் வித்தைபயில் குதிரையென விரைய வேண்டி விரித்துவிட்டான் கைச்சவுக்கை அடியும் பட்டுப் பத்துமடங் கதிகமாக வேகங் கொண்டு பறந்ததுவே அப்புரவி ; செல்லுங் காலே (க)

" துரக்குவது போதாதோ ? இவனே நீண்ட தொலைவுள்ள ஊருக்குச் சுமந்து வந்தேன் தாக்குகிருன் கைச்சவுக்கால் கெடுவான் என்னே ; தருகின்ற உணவுக்கா இந்தத் தொல்லே ? போக்கற்ற் உலகத்தில் குனிந்து தந்தால் பொல்லாத மனிதரவர் எல்லாம் செய்வர் காக்கின்ற உழைப்பாளி ஒட் ஒடக்

கனவான்கள் விரட்டுகிருர் ' என்ற எண்ணம் (உ)

61