பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளும் நானும்

பொங்கிவரு கிலவொளியில் மலர்ந்து நிற்கும் பூத்தோய்ந்து வருதென்றல் உடலே நீவ சங்கொளிதோய் மாடத்துத் தங்கி இன்பம் தருகுடும்ப விளக்கெடுத்துச் சுவைத்தி ருந்தேன் மங்கையவள் என் குடும்ப விளக்காம் நல்ல மனேவிவந்து யார் உரைத்த திந் நூல் ? என்ருள்: எங்கவிபா ரதிதாசன்’ என்றேன்; அத்தான் ! எனக்கவரை ஒருசிறிதும் பிடிக்கா தென்ருள் (க)

உயர் கவிஞன் உணர்ச்சிமிக்கான் புரட்சிப் பாடல் உரைக்கின் ருன் தமிழமிழ்து படைத்துக் காக்கும் செயலினையே புரிகின் ருன் இருந்தும் ஏனே வெறுக்கின்ருய்?செவ்விதழாய்! என்றேன்;அன்ள்ை ‘மயல் புரியும் மங்கைதந்த இன்பம் என்றன் மாத்தமிழுக் டிேல்லை என்று சொன்னல் வயிறெரிய மாட்டாதோ ? பெண்கள் கூட்டம்

வாழ்த்திடுமோ ? விட்டுவிடும் கவிஞர் பேச்சை' (உ)

68