பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க.

சமயங்கள் எத்துணையோ அனேத்தும் கற்றுச் சமத்துவமே கண்டுணர்ந்தார்; ச்ைவர் புத்தர் சமனரென்றும் கிறித்துமக மதிய ரென் அறும் சச்சரவேன் ? இறைஒன்றே உணர்க என் ருர், தமரென்றும் பிறரென்றும் கானர்; நல்ல தமிழ்நாடும் திராவிடமும் இந்தி யாவும் நமதென் பார்; உலகம்கம தென்றும் சொல்வார்; நாகாக்கும் நாகரிகம் அமையப் பெற்ருர் (க)

காந்திய நெறிநிற்பார், கடவுட் கொள்கை கனிந்திருப்பார், பொதுவுடைமைக்கொள்கை ஒன்றே சாந்தியினே அமைதியினே நல்கும் என்று சமரசமே வேண்டிடுவார்; எந்த நாளும் தாந்தி மை கருதலிலார்! எவரை யேனும் தாழ்ச்சியுரை செப்பறியார்; இனிய சொல்லே ஈந்திடுவார்; வேறுபடு கருத்துக் கொண்ட

எவரையுமே பகைத்தறியார்; கண்பே காண்பார் (உ)

சமயமென்றும் தொழிலாளர் இயக்க மென்றும் சார்ந்தோருள் எவரைவிரும் பிடுவீர் என்ருல் சமயம்வரின் பின்ன வர்க்கே என் வி ருப்பைத் தருவேன் என் றறுதியிட்டுச் சொன்ன சொல்லில் இமயமலை பெயர்ந்தாலும் பெயரா வுள்ளம், எதிர்ப்புக்கும் கொடுஞ்சிறைக்கும் அஞ்சா-வூக்கம் அமையவரு பெற்றியினர்; மார்க்சு சொன்ன

அறவுரையைத் தெளிவாக உணர்ந்த சான்ருேர் (க.) = !

78