பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1. எழுத்து

1. எழுத்துக்களின் பிறப்பு -இடம், முயற்சி

(பிறப்பின் பொதுவிதி)


"அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு."

எழுத்துக்களுக்கு ஒலி வடிவம், வரி வடிவம் என்ற இரண்டு உண்டு. நாம் இங்கு எழுத்துக்களின் ஒலி வடிவம் பற்றிய பொதுப் பிறப்பைக் காண்போம்.

மேலே உள்ள திருக்குறளைப் பன்முறை நன்றாக வாய்விட்டுப் படியுங்கள். அங்ஙனம் படிக்கும் பொழுது, அக் குறட்பாவில் உள்ள எழுத்துக்களின் ஒலிகளைச் செவி சாய்த்துக் கேளுங்கள். ஒவ்வொரு எழுத்தும் ஒலி வடிவம் பெறும்பொழுது, ஒன்றற்கொன்று ஒலியமைப்பில் வேறுபடுவதை உணர்வீர்கள்.

அக் குறட்பாவில் உள்ள அ-த்-ன்-ல் என்ற எழுத்துக்களைத் தனித்தனியே ஒலித்துப் பாருங்கள்.

உயிரெழுத்தாகிய என்பது, கழுத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு, வாய் திறத்தலாகிய முயற்சியினால் பிறப்பது தெரியவரும்.