பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 இலக்கண விதி: மொழிமாற்று முதலியபோல், சொற்களைப் பிறழ்ந்து கொண்டுகூட்ட வேண் டாது, ஆற்று நீரொழுக்குப்போல கெறிப்பட்டு, இடையருது அடிதோறும் சிறந்த பொருள் ஆங் காங்கு அமைந்து வருவது, ஆற்றுநீர்ப் பொருள் கோள் எனப்படும். இனி ஒருசாரார், ஏனைய அடிகளை கோக்காது அடிதோறும் பொருள் முடிந்து வருவது, ஆற்று நீர்ப் பொருள்கோள் என்பர். அதற்கு எடுத்துக் காட்டு வருமாறு : 'அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம்; விலைப்பாலிற் கொண்டுன் மிசைதலுங் குற்றம்; சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம்; கொலைப்பாலுங் குற்றமே யாம்.' இப்பாடலில் உள்ள ஒவ்வோர் அடிகளும் தனித்தனியே பொருள் முடிந்துள்ளன. 2. கொண்டுசுட்டுப் பொருள்கோள் 'தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை யுடைத் தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே வங்கத்துச் சென் ருர் வரின்.' 'கப்பலேறிச் சென்ற தலைவன் வந்தால், மை போன்ற கரிய கூந்தலையுடைய தலைவியின் அழகிய உடம்பில், தேங்காய் போலத் திரண்டு உருண்ட கோழியின் வெண்மையான முட்டையை உடைத்து ஊற்றியது போன்ற பசலை கிறம் தணி யும்’ என்பது இப்பாடலின் பொருளாகும்.